விரும்பி கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த மிதுல், திருமணம் நின்றதிலிருந்து வெறுப்புடன் தான் சென்று வருகிறான். ஆசிரியர்களின் வன்மங்களும் மெடோனாவின் வெறுக்கத்தக்க தொல்லைகளும் தான், கல்லூரிக்கு வருவதில் பிடித்தமில்லாமல் போனதுக்கு காரணம்.
எதிலும் திருப்தியுடன் செய்து முடிக்கும் மிதுலுக்கு, இப்போதெல்லாம் திருப்தி எதிலும் ஏற்படுவதில்லை. மனநிறைவுடன் பாடத்தை எடுத்து முடிப்பவனுக்கு, அரைகுறையாகவே எடுத்துவிட்டு வந்தது போல தோன்றியது. என்ன எடுத்தோம் என்பது கூட மறந்து போகிறது அவனுக்கு.
ஆசிரியர்கள் அமரும்...